Read in English
This Article is From Apr 15, 2020

புதிய ஊரடங்கு விதிமுறைகள்: கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகள் ஏப். 20-க்குப் பின் எப்படி இருக்கும்?

Guidelines for Lockdown: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

Home Ministry Guidelines for Lockdown: இதன் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.

Highlights

  • கொரோனா முன்னெச்சரிக்கையாக ஏப் 14 வரை ஊரடங்கு அமலில் இருந்தது
  • அது தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
  • இந்த ஊரடங்கு நாடு தழுவிய அளவிலேயே இருக்கும்
New Delhi:

நாட்டில் இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு, கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் எந்தெந்த விஷயங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்த விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மே 3 ஆம் தேதி வரை அது நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாத இடங்களில் எவற்றுக்கு அனுமதி:

-விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகள்

Advertisement

-குறிப்பிட்ட தொழில்களுக்கு அனுமதி

-டிஜிட்டல் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்கு அனுமதி

Advertisement

-அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற சரக்குகள் செல்வதற்கு அனுமதி

-விவசாய சந்தைகளுக்கு அனுமதி

Advertisement

-உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனுக்கு அனுமதி

-மீன்பிடி தொழில், பால் விநியோகம், பால் பொருட்கள், கால்நடை பண்ணைகள் மற்றும் கோழிப் பண்ணைகளுக்கு அனுமதி

Advertisement

-டீ, காபி மற்றும் ரப்பர் தொட்டங்களுக்கு அனுமதி

-கிராமப்புறங்களில் உள்ள உணவுப் பதப்படுத்தும் தொழில்களுக்கு அனுமதி

Advertisement

-கிராமப்புறங்களில் சாலைக் கட்டுமானம், நீர்ப்பாசனக் கட்டுமானம், கட்டிடம் கட்டுதல், தொழில்துறைகளுக்கு அனுமதி

-மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்திற்கு அனுமதி

-சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற்பேட்டை மற்றும் தொழில் நகரங்களுக்கு முறைப்படுத்தப்பட்ட அனுமதி கொண்ட உற்பத்தித் துறை, தொழிற் துறைக்கு அனுமதி

-ஐடி துறை வன்பொருள் உற்பத்திக்கு அனுமதி

-கரி, தாது மற்றும் எண்ணெய் உற்பதிக்கு அனுமதி

-ஆன்லைன் வர்த்தகம், ஐடி, ஐடி சார்ந்த சேவைகள், டேட்டா மற்றும் கால் சென்டர்களுக்கு அனுமதி

-ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தொலைதூர வகுப்புகளுக்கு அனுமதி

-சுகாதார சேவைகள் மற்றும் சமூகத் துறைகளுக்கு அனுமதி

-மத்திய, மாநில மற்றும் ஊரக அரசு அலுவலகங்கள் திறந்தே இருக்கும்

எதற்கெல்லாம் அனுமதி கிடையாது:

-வான்வழி, ரயில் மற்றும் சாலை வழிப் பயணங்களுக்கு அனுமதி கிடையாது

-கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது

-தொழில் மற்றும் வணிக ரீதியான விஷயங்களுக்கு அனுமதி கிடையாது

-ஓட்டல் உள்ளிட்ட விருந்தோம்பல் சேவைகளுக்கு அனுமதி கிடையாது

-சினிமா அரங்குகள், தியேட்டர்களுக்கு அனுமதி கிடையாது

-ஷாப்பிங் காம்பிளெக்ஸ்களுக்கு அனுமதி கிடையாது

-சமூக, அரசியல் மற்றும் பிறக் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது

-மதக் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது
 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
Advertisement