கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கை 22.17 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது வரை 6,184 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 27,892 பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை பலன் அளிக்காமல் 872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்த 16 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் சமூக தொற்று என்ற அபாய கட்டத்திற்கு இந்தியா செல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதேநேரத்தில் பாதிப்பிலிருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 14 நாட்களாக 25 மாநிலங்களில் இருக்கும் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. நாடு முழுவதும் சுமார் ஒன்றரை கோடி பேருக்கு அரசு சார்பாக உணவு அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தளவில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 47 பேர் சென்னையையும், 4 பேர் மதுரையையும் சேர்ந்தவர்கள்.
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் மட்டும், 81 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னையை சேர்ந்த 34, கோவை 26, சிவகங்கை 10, திருவாரூரை சேர்ந்த 6 பேர் ஆவார்கள்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|