மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று 2 ஆயிரத்தை தாண்டியது. புதிதாக இங்கு 107 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது. மும்பையில் மொத்தம் 2,043 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
மெட்ரோ நகரங்களில் மும்பையில் மட்டும் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதேபோன்று தமிழர்கள் அதிகம் வசிக்கும் குடிசைப்பகுதியான தாராவியில் இன்று புதிதாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
8 லட்சம்பேர் வசிக்கும் தாராவியில் மொத்தம் 86 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
மும்பையில் மட்டும் 1.20 கோடிப் பேர் வசிக்கின்றனர். அதன் புறநகர்ப் பகுதியில் 60 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு கடந்த 6 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா பாதிப்பில் மும்பை நகரின் பங்கு மட்டும் 15 சதவீதமாக இருக்கிறது.
மற்ற மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் மும்பையில்தான் அதிக பரிசோதனை நடத்தப்படுகிறது. டெல்லியில் 10 லட்சம் பேரில் 448 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும் நிலையில், மும்பையில் இந்த எண்ணிக்கை 2,374 ஆக உள்ளது. அதிகப்படியானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இன்று புதிதாக உறுதி செய்யப்பட்ட 165 பேருடன் மகாராஷ்டிராவில் கொரோனாவால் மொத்தம் பாதிப்பை அடைந்தோர் எண்ணிக்கை 3,081 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய அளவில் இன்று புதிதாக 826 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,759 ஆக உயர்ந்துள்ளது. இன்று 28 பேர் உள்பட மொத்தம் 420 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|