உத்தர பிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அரசு மருத்துவர்கள் மற்றும் பாராமெடிக்கல் ஊழியர்கள் தாங்கள் அரசு பள்ளியில் மோசமான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலை குறித்து வீடியோவை வெளியிட்ட நிலையில் தற்போது அவர்கள் அனைவரும் விருந்தினர் மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் அனைவரும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்படுமால், (குடும்பத்தினருக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக) தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிகரிக்கு அவர்கள் எழுதியுள்ள புகார் கடிதத்தில், கொரோனா நோயாளிகளை பார்த்துக்கொள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எங்களுக்கு மருத்துவமனை அருகில் உள்ள பள்ளியில் தங்குமாறு அரசு இடம் ஒதுக்கி தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அந்த தங்குமிடம் குறித்த மருத்துவர்கள் குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், நேரம் தற்போது காலை 3மணி, இங்கு மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு அறைக்கு 4 கட்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது 5 நட்சத்திர தரத்தில் இருந்தாலும், அதில் மின்விசிறி கூட இயங்கவில்லை. இப்படி, இருக்க பொது கழிவறையின் நிலை குறித்து காண்பிக்கிறோம். அங்கு தண்ணீர் பைப்புகள் இல்லாத, மோசமான நிலையில் உள்ளது.
இப்படிப்பட்ட இடத்தில் தான் நாங்கள் பணி முடித்து வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்று முதல் வீடியோ முடிகிறது. அடுத்து, இரண்டாவது வீடியோவில், உணவு வழங்கப்படுவது குறித்து விவரிக்கிறது.
அதில், மதிய உணவு வழங்கப்பட்டதை காண்பிக்கின்றனர். அவை பாலித்தீன் பைகளில் பொட்டலம் இடப்பட்டு மொத்தமாக ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில், பூரியும், கிழங்கும் வைக்கப்பட்டுள்ளன. இதுவே கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் உணவாகும் என்று ஒருவர் கூறுகிறார்.
மூன்றாவது வீடியோவில், பாதுகாப்பு உடையில் உள்ள மருத்துவர் சுகாதாரப் பணியாளர்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என்பதை விளக்குகிறார்.
அதில், அரசு பள்ளி ஒன்றின் வகுப்பறையில், தூங்குவதற்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறைக்கும் 4 பேர் என்கிற விதத்தில், கட்டில்கள் போடப்பட்டுள்ளன. இது தனிமைப்படுத்தலுக்கு எதிரானதாகும். கழிவறைகள் குறித்து புகார் தெரிவித்த போது அவர்கள் மொபைல் கழிவறைகளை கொண்டு வந்து நிறுத்தினர். நேற்றிரவு 20 லிட்டர் தண்ணீர் கேன் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அதையே நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்கள் என்று அவர் கூறினார்.
இதுபோன்ற முறையில் நாங்கள் நடத்தப்பட்டால், எங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா? இல்லையா? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்த புகார்கள் தொடர்பாக மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி கூறும்போது, அனைத்து புகார்களும் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
அனைவரும் தற்போது அருகில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கேயே சமைத்து வழங்கும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
கொரோனா பணியில் முன்னணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும், மீண்டும் பல்வேறு அரசியல் தலைவர்களால் கவலை தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும். மேலும் ஆறு மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|