நாட்டில் கொரோனா பரவுதல் நிலை அதிவேகமாக இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,409 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொள்கின்றன. இதனால் மத்திய அரசு ஏற்படுத்திய ஊரடங்கு நடவடிக்கைக்கு முழு பலன் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்த பாதிப்பில் 4,257 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது பாதிப்பு அளவில் 19.89 சதவீதம் ஆகும்.
கடந்த 14 நாட்களாக 23 மாநிலத்தில் 78 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்ப ஏற்படவில்லை. கடந்த 28 நாட்களாக 12 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மோடி 11 குழுக்களை தேசிய அளவில் அமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அதிகாரி சி.கே. மிஷ்ரா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது உண்மைதான். ஆனால் அதிவேகமாக கொரோனா பரவவில்லை. குறிப்பாக நாம் ஊரடங்கை தீவிரப்படுத்தியதுடன் அதனை நீட்டிக்கவும் செய்தோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
கடந்த 30 நாட்கள் ஊரடங்கால் நாம் கொரோனா பரவுதலை அதிகளவு கட்டுப்படுத்தியுள்ளோம். பாதிப்பு இரு மடங்காக அதிகரிப்பதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொள்கிறது. மற்றொரு நடவடிக்கையாக பரிசோதனைகளை நாம் அதிகப்படுத்தியுள்ளோம்.
கடந்த 30 நாட்களில் சோதனை செய்யும் அளவு 33 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் இவை போதுமானதாக இல்லை. இன்னும் நாம் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். மார்ச் 23-ம்தேதி நிலவரப்படி 14,915 பேருக்கு பரிசோதனை செய்தோம். அவர்களில் 4 முதல் 4.5 சதவீதம் வரையிலானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்றைக்கு 5 லட்சம்பேருக்கும் அதிகமாக சோதனை நடத்தியுள்ளோம். அதே சதவீத பாதிப்புதான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாட்டில் சுமார் 50 சதவீத பாதிப்பு மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மாநிலங்களில்தான் உள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 5,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. மற்ற இரு மாநிலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் 430 மாவட்டங்களில் கொரோனா தொற்று உள்ளது. ஏப்ரல் 2-ம்தேதி நிலவரப்படி 211 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 21,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 681 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|