Read in English বাংলায় পড়ুন
This Article is From Mar 22, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் மரணத்தின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் சங்கிலியை உடைக்க "மக்கள் ஊரடங்கு உத்தரவு" அல்லது சுயமாகத் தனிமைப்படுத்தலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார்

Advertisement
இந்தியா
New Delhi:

இந்தியாவின் மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் பீகாரில் இருந்து இன்று இரண்டு கொரோனா வைரஸ் இறப்புகள் பதிவாகியுள்ளன, இது இந்தியாவில் COVID-19 வைரஸ் மரணங்கள் எண்ணிக்கை இதன் மூலமாக இந்தியாவில் ஆறாக அதிகரித்துள்ளது.

பீகாரில், சமீபத்தில் கத்தார் சென்ற 38 வயது நபர் பாட்னாவின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக இறந்தார். அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார் என பீகார் சுகாதார செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்பு இளம் வயதில் இறந்த முதல் இளைய நபராவார்.

Advertisement

மகாராஷ்டிராவில் மாநிலத்தில்தான் அதிக அளவிலான கொரோன தொற்றுடன் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன(74). மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 63 வயது நபர் இன்று காலை இறந்தார். "நோயாளிக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இஸ்கிமிக் இதய நோய் பற்றிய நீண்டகால வரலாறு இருந்தது" என்று மும்பையின் குடிமை அமைப்பான பிரஹமும்பை மாநகராட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர் கடுமையான சுவாசக் குழாய் நோய்க்குறியை அறிகுறியைக் கொண்டிருந்தார்.

இது மும்பையில் கொரோனா வைரஸுடன் இணைக்கப்பட்ட இரண்டாவது மரணம் ஆகும், இந்த வைரஸானது சீனாவில் தோன்றி 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. டெல்லி, பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் இருந்து இந்த மாதத்தில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நோயாளிகள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் பத்து பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 6 பேர் மும்பையிலும் நான்கு பேர் புனேவிலும் உள்ளனர்.

இந்தியாவில் 300 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அளித்த 14 மணி நேர சுய தனிமைப்படுத்தல் அல்லது "மக்கள் ஊரடங்கு உத்தரவு" அழைப்பைக் கடைப்பிடிக்கின்றனர். உலகளவில், 13,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

  1. இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் COVID-19 தொற்றுக்கு எதிராக  அதைக் கட்டுப்படுத்த, உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒரு நாள் "மக்கள் ஊரடங்கு உத்தரவு"  நடவடிக்கை முயற்சியை மேற்கொண்டுள்ளது. வியாழக்கிழமை, பிரதமர் மோடி தேசத்திற்கு 29 நிமிட உரையில் கூறியதாவது: "இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை, எனவே நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நாம் மக்கள் திரள்களைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்க வேண்டும். சமூக விலகல் முக்கியமானது. நீங்கள் நினைத்தால் வழக்கம் போல் சுற்றலாம் மற்றும் உங்களுக்கு ஆபத்து ஏற்படாது என்று உணரலாம், இது தவறானது; உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படுகிறது. " என்று குறிப்பிட்டிருந்தார்.
  2. மாலை 5 மணிக்குக் குடிமக்கள் தங்கள் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளில் நின்று, அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மருத்துவ சுகாதார ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகக் கைதட்டல் மேற்கொள்ளப்பட வேண்டும். முழுதும் ஒரு சுய தனிமைப்படுத்தப்பட்ட முறையில் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
  3. புனேவில் ஒரு பெண்ணும், மேற்கு வங்காளத்தில் ஒரு ஆணும் - வெளிநாட்டுப் பயணத்தின் எந்த வரலாறும் இல்லாமல் - சனிக்கிழமையன்று கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 315 ஆக உயர்ந்ததால் சமூக பரவல் குறித்த அவசியத்தை உணர்த்துகிறது.
  4. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் கையாளும் வணிகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் தவிர, மற்ற அனைத்தும் இன்றும் மூடப்படும். சுய தனிமைப்படுத்தலுக்கான பிரதமரின் அழைப்பைப் பின்பற்றுவதாக வணிகங்கள் தானாக முன்வந்து அறிவித்துள்ளன.
  5. நாடு முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கின்றது. எந்த ரயில்களும் - நீண்ட தூரம் அல்லது புறநகர் – ஓடாது என ரயில்வே கூறியுள்ளது. ஆனால், ஏற்கனவே ஓடும் விமானங்கள் பகலில் நிறுத்தப்படாது. இண்டிகோ மற்றும் கோ ஏர் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் குறைந்தபட்ச திறனில் இயங்கும் அல்லது அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாகக் கூறியுள்ளன. டெல்லி, பெங்களூரு மற்றும் பிற நகரங்களில் எந்த மெட்ரோ ரயில்களும் இயக்கப்படாது.
  6. நாடு முழுவதும் படிப்படியாகப் பணிநிறுத்தம் - பாதுகாப்பு தடைகளை அறிவித்த மாநிலங்களில் தற்போது  ராஜஸ்தானும் தன்னை இனைத்துக்கொண்டுள்ளது – இது வணிகங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. முன்பதிவு ரத்து செய்யப்பட்டதால் பயணத் துறை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
  7. இந்த மாதத்தில் பயணித்த 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அனைத்து பயணங்களையும் ஒத்திவைக்குமாறு ரயில்வே துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தினமும் ரயில்வேயை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மக்கள் பரவல் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவும் அபாயத்தை ஏற்படுத்தும்.
  8. வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தலைத் தவிர்த்தவர்களுக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. கொல்கத்தாவில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன், இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு முன்பு பலருடன் சமூக தொடர்பைக் கொண்டிருந்தார்.  பெங்களூரில் உள்ள ஒரு கூகிள் ஊழியரின் மனைவியின் குடும்பம், அவரது கணவர் கொரோனா வைரஸுக்கு சாதகமாகப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். அவர் இருக்கும் இடம் குறித்து சுகாதார அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது. விருந்துகளில் கலந்து கொண்ட பாடகி கனிகா கபூர் மீது போலிஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் பல அரசியல்வாதிகள் மற்றும் அவருடன் இரவு உணவில் கலந்து கொண்ட மற்றவர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
  9. சனிக்கிழமையன்று, மக்கள் சமூக ஊடகங்களிலும், மாலை 5 மணியளவில் பால்கனிகளில் இருந்து கைதட்டல் போன்ற வீடியோக்களை வெளியிட்டனர், இது COVID-19 க்கு எதிரான போரில் முன்னணியில் இருக்கும் சுகாதார வல்லுநர்களுக்கும் பிற தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் பாராட்டுக்களைக் குறிப்பிடுகிறது.
  10. கொரோனா வைரஸ்கள் வைரஸின் ஒரு பெரிய குடும்பமாகும், அவை ஜலதோஷம் முதல் கடுமையான நோய்கள் வரை நோயை ஏற்படுத்துகின்றன. COVID-19 என்பது சீனாவின் வுஹானில் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய வைரஸாகும். இது முன்னர் மனிதர்களில் அடையாளம் காணப்படவில்லை. கொரோனா வைரஸ்கள் ஜூனோடிக் ஆகும், அதாவது அவை விலங்குகளுக்கும் மக்களுக்கும் இடையில் பரவுகின்றன.
Advertisement