கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாத் அமைப்பினருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 25,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 14-ம்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் தப்லீக் அமைப்பின தலைமையகமான டெல்லி நிஜாமுதீன் மர்கஸில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த மாதம் அங்கு நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட 400-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தப்லீக் மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து 1,103 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் தப்லீக் ஜமாத் அமைப்பினருடன் தொடர்பில் இருந்து,கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தின்பேரில் 25,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அரியானா மாநிலத்தில் 4 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளனர்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|