This Article is From Aug 15, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 65 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு! 996 பேர் உயிரிழப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 8,68,679 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 364, தமிழகத்தில் 117, கர்நாடகாவில் 104, ஆந்திர பிரதேசத்தில் 97, மற்றும் மேற்கு வங்கத்தில் 60 என உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் ஒரே நாளில் 65 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு! 996 பேர் உயிரிழப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் 65,002 நபர்கள் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

ஹைலைட்ஸ்

  • கடந்த 24 மணி நேரத்தில் 65,002 நபர்களுக்கு கொரோனா
  • அதேபோல 996 பேர் உயிரிழந்துள்ளனர்
  • ஒட்டு மொத்த உயிரிழப்பு 49,036 ஆக அதிகரித்துள்ளது.
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இன்று 25,26,193 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 65,002 நபர்கள் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 996 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 49,036 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 6,68,220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18,08,937 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 71.60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த பரிசோதனையில் பாசிடிவ் விகிதம் என்பது 7.48 சதவிகிதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 8,68,679 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 364, தமிழகத்தில் 117, கர்நாடகாவில் 104, ஆந்திர பிரதேசத்தில் 97, மற்றும் மேற்கு வங்கத்தில் 60 என உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதேபோல, மகாராஷ்டிராவில் 12,608, ஆந்திராவில் 8,943, கர்நாடகாவில் 7,908, தமிழகத்தில் 5,890, மற்றும் உத்தர பிரதேசத்தில் 4,512 பேர் என கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

.