This Article is From Aug 27, 2020

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 75,760 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Coronavirus: தொடர்ந்து, நாட்டில் இதுவரை 25,23,771 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.24 சதவீதமாக உள்ளது.

New Delhi:

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 75,760 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய வழக்குகள் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 33.1 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, நாட்டில் இதுவரை 25,23,771 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.24 சதவீதமாக உள்ளது. நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 14,888 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 7,18,711 ஆக உயர்நுதள்ளது. இதற்கு முன்பு ஆக.21ம் தேதி அதிகபட்சமாக 14,492 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,958 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. அதேபோல், ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கையானது 6,839 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள மூன்றாவது மாநிலமாக ஆந்திர பிரதேசம் உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 10,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,82,469ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையானது பாதிப்படைபைவரிகளின் எண்ணிக்கையை விட 3.5 மடங்கு அதிகமாக உள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டில் இதுவரை கொரோனா வைரஸூக்கு 3.85 கோடி மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 9.24 லட்சம் மாதிரிகள் நேற்று ஒரே நாளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 8.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2.41 கோடி பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

.