கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆந்திர அரசு 58 தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தியுள்ளது. மொத்தம் 13 மாவட்டங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு கையகப்படுத்திய தனியார் மருத்துவமனைகளில் 1,286 அவசர சிகிச்சை படுக்கைகள், 717 தனிமைப்படுத்தும் படுக்கைகள் உள்பட மொத்தம் 19,114 படுக்கைகள் உள்ளன.
கூடுதலாக 530 படுக்கை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்தும் இடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விசாகப்பட்டினத்தில் வென்டிலேட்டர்கள், டெஸ்டிங் கிட்டுகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
முன்னதாக நேற்று, மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.
மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதை தொடர்ந்து மருத்துவ வசதிகளையும் ஆந்திர அரசு விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனாவை கண்டறிவதற்கென ஆய்வகங்களை ஏற்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கு தனிமைப்படுத்தும் வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தடுப்பு குறித்து ஆந்திர அரசின் உயர் அதிகாரி கிரிஜா சங்கர் அளித்த பேட்டியில், 'கொரோனாவை ஒழிப்பதில் தனியார் மருத்துவமனைகளும் பங்கெடுக்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் வைத்திருந்தார். இதனை ஏற்று தனியார் மருத்துவமனைகள் படுக்கை வசதிகளை எற்படுத்தித்தர முன் வந்துள்ளன. மொத்தம் 19 ஆயிரம் படுக்கை வசதிகளைக் கொண்ட 58 தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தியுள்ளோம். இது மாநிலத்தின் மருத்துவ வசதியை மேம்படுத்த உதவும்.' என்றார்.
3 லட்சம் ரேப்பிட் டெஸ்டிங் கிட்டுகளை ஆந்திர அரசு ஆர்டர் செய்துள்ளது. இங்கு மொத்தம் 305 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|