Read in English বাংলায় পড়ুন
This Article is From Mar 22, 2020

"மக்கள் ஊரடங்கு உத்தரவு" காரணமாக வெறிச்சோடிய இந்தியச் சாலைகள்

இது, நாடு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான திறன்களை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான சோதனை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். "இந்த ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக நாம் அனைவரும் சுய தனிமைப்படுத்தலை ஏற்போம், இந்த முயற்சி COVID-19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தை நமக்கு அளிக்கும்"

Advertisement
இந்தியா Posted by

இந்தியாவில் கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை சனிக்கிழமை 315 ஆக உயர்ந்துள்ளது.

New Delhi:

பொருளாதாரத்தினை சீர்குலைந்து உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற, மிகவும் கொடிய தொற்றுநோயான COVID-19 இன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இன்று சுய ஊரடங்கினை கடைப்பிடிக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தேசத்திற்கு உரையாற்றியபோது, குடிமக்கள் வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டார் – இது, நாடு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான திறன்களை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான சோதனை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். "இந்த ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக நாம் அனைவரும் சுய தனிமைப்படுத்தலை ஏற்போம், இந்த முயற்சி COVID-19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தை நமக்கு அளிக்கும்" என்று ஊரடங்கு உத்தரவு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மோடி ட்வீட் செய்துள்ளார். "இப்போது நாம் எடுக்கும் நடவடிக்கைகள் வரவிருக்கும் காலங்களில் உதவும்" என்றும் அவர் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தியா 14 மணி நேர ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிப்பதால் லக்னோவின் புகழ்பெற்ற அம்பேத்கர் பூங்காவும், காலை நேர நடைப்பயணமும் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன.

தீவிர தொற்றுநோயான COVID-19 இன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் இன்று சுய ஊரடங்கினை கடைப்பிடிக்கின்றனர். இதன் காரணமாக லக்னோவின் புகழ்பெற்ற ரூமி தர்வாசா மற்றும் இமாம்பரா அருகே சாலைகள் காலியாக காணப்படுகின்றன

ஹரியானாவில், பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன எனப் போக்குவரத்து அமைச்சர் மூல் சந்த் சர்மா செய்தி நிறுவனமான பி.டி.ஐயிடம் தெரிவித்திருந்தார். "கொரோனா வைரஸ் பரவுவதைச் சமாளிக்க மாநில அரசு ஒவ்வொரு மட்டத்திலும் செயல்பட்டு வருகிறது." என்று குறிப்பிட்டிருந்தார். 

மாலை 5 மணிக்குக் குடிமக்கள் தங்கள் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளில் நின்று, அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்களுக்கு ஆதரவாகக் கைதட்டி உற்சாகமூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

மக்கள் வெளியேறாததால் ஷாருக்கானின் 'மன்னாட்' வெறிச்சோடி கணப்பட்டது. கொடிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு தொடங்கி இன்று இரவு 9 மணி வரை தொடரும் 'ஜனதா ஊரடங்கு உத்தரவை' நாடு முழுவதும் மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

Advertisement