கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆதரவற்றோர் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் மனைவி சவீதா கோவிந்த் முகக்கவசங்கள் தைத்து கொடுத்தார்.
இந்த முகக்கவசங்கள் டெல்லியில் நகர்புறங்களில் உள்ள பல்வேறு ஆதவற்றோர் முகாம்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறன்றன. இதுதொடர்பான புகைப்படத்தில் சவீதா சிவப்பு நிற துணியால் ஆன முகக்கவசத்தை அணிந்து, ஆதரவற்றோருக்கு முகக்கவசங்களைத் தைத்துக் கொடுக்கிறார்.
இதுபோல, முகக்கவசங்களை தைத்துக்கொடுப்பதன் மூலம், அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராடலாம் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
முகக்கவசங்களை அணிவது மட்டுமல்லாமல், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளயும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
கொரோனா பரவல் கொண்டுள்ள இதுபோன்ற நேரத்தில், துணியாலான முகக்கவசங்கள், மூன்றடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் மற்றும் N95 முகக்கவசங்கள் உள்ளிட்டவை பயன்பாட்டில் உள்ளன.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|