This Article is From Mar 06, 2020

கொரோனா பீதி: கையுறை, முகமூடி அணிந்து வந்த நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 3,200 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பீதி: கையுறை, முகமூடி அணிந்து வந்த நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள்

Coronavirus: கையுறை, முகமூடி அணிந்து வந்த நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள்

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையாளர்களைச் சோதனையிடும் போது, கையுறை அணிந்து சோதித்து வருகின்றனர். 

சில பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடி அணிந்தபடி நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றி வருகின்றனர். 

முன்னதாக நேற்றைய தினம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறும்போது, இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இனி சர்வதேச விமான நிலையங்களிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் சோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 3,200 பேர் உயிரிழந்துள்ளனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.