This Article is From Apr 06, 2020

புதிதாக 50 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621-ஆக உயர்வு!!

91,851 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருக்கின்றனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் உயிரிழந்துள்ளார். 

புதிதாக 50 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621-ஆக உயர்வு!!

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் புதிதாக இன்று 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
  • பெரும்பான்மையினர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
  • கொரோனா பாதிப்புக்கு தமிழகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று 50 அதிகரித்து, 621-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று 50 அதிகரித்து, 621-ஆக உயர்ந்திருக்கிறது. புதிதாக பாதிக்கப்பட்ட 50 பேரில், 48 பேர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-லிருந்து 6-ஆக அதிகரித்துள்ளது. சமூக பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

91,851 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருக்கின்றனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் உயிரிழந்துள்ளார். இவர் திருச்சிக்கு ரயிலில் சென்று வந்துள்ளார்.

பாதிப்பை உறுதி செய்வதற்கு 1 லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 30 நிமிடங்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும். 

28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து மொத்தம் 19,060 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஒரேநாள் உயர்வு அடிப்படையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86-ஆக உயர்ந்திருந்த நிலையில், இன்று 50-ஆக குறைந்திருக்கிறது.

.