இந்தியாவின் முதல் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று தொடங்கி வைத்தார். இந்த வாகனங்கள் மூலம் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில், 'மிக நீண்ட தூர பகுதிகள், கிராமங்களிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக நடமாடும் கொரோனா பரிசோதனை வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.
மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையும், ஆந்திராவின் மெட் - டெக் நிறுனமும் இணைந்து இந்த வாகன சேவையை உருவாக்கியுள்ளன.
இந்த வாகனத்திற்குள் 25 ஆர்.டி. - பி.சி.ஆர். டெஸ்ட் கிட்டுகள் இருக்கும். இதை தவிர்த்து எலைசா சோதனைக்காக 300 கிட்டுகள், காசநோய், எச்.ஐ.வி. கண்டறியும் கருவிகள் உள்ளிட்டவை இருக்கும். அரசு மருத்துவமனையின் கட்டணத்தின் அடிப்படையில் பரிசோதனைக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஏற்படத் தொடங்கிய பிப்ரவரி மாதத்தின்போது இந்தியாவில் ஒரேயொரு கொரோனா பரிசோதனை மையம் மட்டும் இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை 953 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார். இதில் 699 மையங்கள் அரசு மையங்கள் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 12,881 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் 3,66,946 ஆக உயர்ந்துள்ளது.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|