கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் சூழலில் எல்லையை கவனமாக பாதுகாக்க வேண்டும் என்று எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை மேற்கொண்டார். வீடியோ கான்பரன்சிங் முறையில் இந்த சந்திப்பு நடந்தது.
இந்த நிலையில் அமித் ஷாவிடம் இருந்து இன்று உத்தரவு வந்துள்ளது. பாகிஸ்தான், வங்க தேச எல்லைகள் குறிப்பாக வேலி போடப்படாத பகுதியில் துணை ராணுவம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
பாதுகாப்பு மேற்கொள்ளும் அதே நேரத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வை எல்லை பாதுகாப்பு படையினர் கிராம மக்களிடம் மேற்கொள்ள வேண்டு என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவையொட்டி 37,978 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 14.3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உணவுக்கென 26,225 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒருகோடிக்கும் அதிகமானோருக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது. 16.5 லட்சம் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன.
அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரவிருப்பதால் ஊரடங்கை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த தகவலை உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி புன்யா சலிலா தெரிவித்துள்ளார்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|