This Article is From Jun 22, 2020

உ.பியில் அரசு காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா!

பாதிக்கப்பட்ட 57 சிறுமிகளும் கொரோனா தொற்று மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்படாத சிறுமிகள் மற்றும், காப்பக ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காப்பகம் மூடப்பட்டுள்ளது.

நேர்மறை சோதனை செய்த 57 சிறுமிகளில் ஐந்து பேர் தங்குமிடம் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கர்ப்பமாக இருந்தனர்

ஹைலைட்ஸ்

  • All 57 girls have been shifted to COVID-19 hospitals
  • The staff and those girls who are not infected have been quarantined
  • Kanpur currently has 400 active cases, the second-highest in the state
Kanpur:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நான்கு லட்சத்தினை கடந்துள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் அரசு நடத்தும் சிறுமிகள் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்த காப்பகம் தொற்று பரவல் மையமாக மாறியுள்ளது.

பாதிக்கப்பட்ட 57 சிறுமிகளும் கொரோனா தொற்று மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்படாத சிறுமிகள் மற்றும், காப்பக ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காப்பகம் மூடப்பட்டுள்ளது.

முன்னதாக காப்பகத்தில் உள்ள இரு சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில், அனைத்து சிறுமிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், காப்பகத்தில் உள்ள ஐந்து சிறுமிகள் கர்ப்பமாக உள்ளனர் என்றும், இவர்கள் காப்பகத்திற்கு வருவதற்கு முன்னமே கர்ப்பமாக இருந்துள்ளனர் என கான்பூர் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

“அவர்கள் (ஐந்து சிறுமிகள்) வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள ஐந்து குழந்தைகள் நலக் குழுக்கள் வழியாக இந்த தங்குமிடம் இங்கு அனுப்பப்பட்டனர். இவை போக்ஸோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் தங்குமிடத்தில் அனுமதிக்கப்பட்டபோது அவர்கள் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தனர்.“ என கான்பூர் நீதிபதி டாக்டர் பிரம் தேவ் திவாரி கூறியுள்ளார்.

கான்பூர் மருத்துவமனைக்கு வருகை தரும் தங்குமிடம் ஊழியர்கள் இரண்டு சிறுமிகளுடன் தொடர்பு கொண்டதால் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உ.பி. மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பூனம் கபூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கான்பூரில் தற்போது 400 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உ.பியில் கொரோனா பாதிக்கப்பட்ட இரண்டாவது மாவட்டமாக கான்பூர் உள்ளது. மேலும், டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் அதிகபட்சமாக 577 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம் முழுவதும் கிட்டத்தட்ட 17,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,000க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 507 பேர் உயிரிழந்துள்ளனர்.

.