கொரோனா வைரஸ் என்பது காய்ச்சல் அல்லது சளி போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒரு தொற்று நோயாகும். காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இந்த அறிகுறிகளில் அடங்கும். COVID-19 வைரஸின் இந்த அறிகுறிகள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்றும் இருக்கலாம். வித்தியாசத்தை நீங்கள் எவ்வாறு கண்டறியலாம் என்பது குறித்து இங்கே விளக்கப்பட்டிருக்கின்றது.
கொரோனா வைரஸ் முதன்முதலில் மனிதர்களுக்குத் தொற்றியுள்ளது என்பது 2019 டிசம்பரில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு தொற்று நோயாகும், இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதாகத் தொற்றும். கொரோனா வைரஸின் அறிகுறிகள் காய்ச்சல் அல்லது ஜலதோஷத்தை சம்பந்தப்பட்டிருப்பவை. கொரோனா வைரஸின் சில பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு மற்றும் வறட்டு இருமல் ஆகியவையாகும். சில நோயாளிகளுக்கு உடல் வலி, நாசி அடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படக்கூடும். இது பலருக்குச் சுவாச பிரச்சனையையும் ஏற்படுத்தும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவில் 140 க்கும் மேற்பட்டவர்களைப் பாதித்துள்ளது. வானிலை மாற்றத்துடன், பலர் இந்த அறிகுறிகளைப் போன்ற காய்ச்சலையும் சந்திக்கின்றனர். கொரோனா வைரஸின் அறிகுறிகள் காய்ச்சலுக்கான அறிகுறிகளாக எளிதில் தவறாகக் கருதப்படலாம்.
கொரோனா வைரஸ் Vs காய்ச்சல்: வித்தியாசத்தை எவ்வாறு கண்டறிவது
கொரோனா வைரஸ், காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்ற அறிகுறிகளுக்கு இடையிலான விளக்கத்தினை டாக்டர் பி. ரகு ராம் (இந்திய அறுவைசிகிச்சை சங்கத்தின் தலைவர்) மற்றும் டாக்டர் ஷரத் ஜோஷி (முதன்மை ஆலோசகர், நுரையீரல், மேக்ஸ் மருத்துவமனை) ஆகியோர் வழங்கியுள்ளனர்.
இது கொரோனா வைரஸ் அறிகுறியா?
கொரோனா வைரஸின் அறிகுறிகளின் காலவரிசை மற்றும் அவற்றை மற்ற அறிகுறிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை டாக்டர் ரகு ராம் விளக்குகிறார். அவர் விளக்கிய சில முக்கிய விஷயங்கள் இங்கே
1.கொரோனா வைரஸின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது
உலர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை கொரோனா வைரஸின் அறிகுறிகளாக அடையாளம் காணப்படுகின்றன. உலர் இருமல் நுரையீரல் பாதிப்பை உள்ளடக்கியிருப்பதால் ஏற்படுகிறது. நுரையீரல் திசுக்கள் மற்றும் காற்றுப்பாதைகள் சேதமடைவதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இந்த நோய்த்தொற்றின் விளைவாக, காய்ச்சல் ஏற்படும். இது எப்போதும் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இந்த அறிகுறிகளில் 80% லேசானவை. பல சந்தர்ப்பங்களில், மக்கள் அறிகுறியற்றவர்களாக இருக்கலாம். காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்களைப் பரந்த அளவில் கண்காணிக்கப்பட வேண்டியதற்கான காரணம் இதுதான்.
2. காய்ச்சலின் அறிகுறிகள்
காய்ச்சலைப் பற்றிப் பேசுகையில், அது மூக்குடன் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து இருமல் மற்றும் காய்ச்சல். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மிகச் சிலரே இருமலுடன் சளி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
3. தொண்டை புண் பற்றி?
ஒருவருக்கு தொண்டைப் புண் மட்டுமே இருந்தால், அது கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்க முடியாது. அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதன் மூலம் ஒருவர் தொண்டைப் புண் வரலாம். தொண்டைப் புண் இருப்பதால் கவலைப்படக்கூடாது என்பதால், இந்த அறிகுறிகளுடன் சுய திருப்தி கொள்ளக் கூடாது முக்கியம்.
நோய்த்தொற்றுடையவர்கள் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஒரு பெரிய வைரஸ் கிருமிகளை வெளியேற்றலாம். மற்றும் அதிக எண்ணிக்கையிலான மக்களை இது பாதிக்கலாம். இந்த அறிகுறியற்ற நபர்களை அடையாளம் காண்பதை விட, இந்த நேரத்தில் நாம் அதிக எண்ணிக்கையிலான மக்களைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண வேண்டும்.
Also read: How Effective Are Hand Sanitisers In Preventing Coronavirus? Doctors Explain
எங்களுக்கு இப்போது தனியார்த் துறையின் ஆதரவும் தேவை. சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் மருத்துவ கண்காணிப்புகளை இலவசமாகச் செய்ய வேண்டும். இது உலகளாவிய அவசரநிலை. இதனைப் பரந்த அளவில் செய்ய அரசாங்கம் வழிமுறைகளை வழங்க வேண்டும்.
டாக்டர் ஷரத் ஜோஷி, மக்கள் அமைதியாக இருக்கவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் அறிவுறுத்துகிறார். "பீதி அடையத் தேவையில்லை. வானிலை மாற்றத்தால் மக்கள் குளிர், இருமல் மற்றும் பிற காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும். ஆண்டின் இந்த நேரத்தில் காய்ச்சல் அறிகுறிகள் மிகவும் பொதுவானவை. லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் பீதி சூழ்நிலையை உருவாக்கக்கூடாது. யாராவது சுவாசப் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்றால், கொரோனா வைரஸுக்கு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அதேசமயம், சுவாச பிரச்சினைகள் உடன் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவை. இந்த அறிகுறிகள் வழக்கத்தை விட நீண்ட காலம் நீடித்தால், இதுபோன்ற சூழ்நிலையில் மருத்துவ ஆலோசனை மிக அவசியமாகும். "
"கொரோனா வைரஸ் யாரையும் பாதிக்கக்கூடும் என்பதால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அனைவரும் பின்பற்ற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.
மறுப்பு: ஆலோசனை உள்ளிட்ட இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் தகுதி வாய்ந்த மருத்துவ கருத்துக்கு மாற்றாக இல்லை. மேலும் தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணரை அல்லது உங்கள் சொந்த மருத்துவரை அணுகவும். இந்த தகவலுக்கான பொறுப்பை என்டிடிவி கோரவில்லை.