கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம் இந்தியா, இந்தியா காலத்திற்கேற்ற கடும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறி பாராட்டு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த மாதம் 25-ம்தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. ஆனால் இந்த இடைப்பட்ட நாட்களில் வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி மே 3-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், மக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் அதிரடி நடவடிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் (WHO - World Health Organization) தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான இயக்குநர் பூனம் கெத்ராபால் சிங் கூறியதாவது-
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை குறித்து நாம் இப்போது கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள 6 வார கால ஊரடங்கு நடவடிக்கை நிச்சயமாக வைரஸ் பரவுதலை தடுக்கும்.
சமூக விலகல், தனிமைப்படுத்தல், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்தல், பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதற்கு நிச்சயமாகப் பலன் கிடைக்கும். ஊரடங்கால் இந்திய அரசுக்கு பல சிக்கல்கள் எழுந்துள்ளன. இருப்பினும், கொரோனாவை ஒழிக்கும் போரில் மிக உறுதியாக இந்தியா இருக்கிறது.
இந்தியா மேற்கொண்டிருக்கும் காலத்திற்கேற்ற கடும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மக்களும் தங்களால் முடிந்த சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும். அதனால் மட்டுமே கொரோனா ஒழிப்பு சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று அதிரடியாக 1,463 அதிகரித்து 10,815 ஆக உள்ளது. 339 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பில் 1,190 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 31 அதிகரித்து 1,204 ஆக உள்ளது. இந்த மாதத்தில் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மிகக்குறைந்த பாதிப்பு (31) இது என்பது குறிப்பிடத்தக்கது.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|