டெல்லி மெட்ரோ நிலையத்தில் தம்பதியினர் வரம்பு மீறி இருந்த வீடியோ ஒன்று பார்ன் சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மெட் ரோ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
“இந்த சம்பவம் தொடர்பாக டி.எம்.ஆர்.சி புகார் அளித்துள்ளது. சம்பவத்தின் அனைத்து தகவல்களையும் விவரங்களையும் காட்சிகளையும் நாங்கள் காவல்துறைக்கு அனுப்பியுள்ளோம். மேலும் இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்” என்று மூத்த மெட்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“மெட்ரோவில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று பயணிகளையும் பொது மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.
காவல்துறையினர் புகார் பெற்றுள்ளதாகவும் ஆபாச காட்சிகளின் வீடியோவும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.