Read in English বাংলায় পড়ুন
This Article is From Jun 05, 2020

INX Media வழக்கில் சிதம்பரத்தின் பிணைக்கு எதிராக சிபிஐ மனு- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தைக் கைது செய்தது சிபிஐ. 

Advertisement
இந்தியா Edited by

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. 

Highlights

  • சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு உள்ளது
  • சிபிஐ, அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளன
  • கடந்த ஆண்டு இரு வழக்குகளிலும் சிதம்பரத்துக்கு பிணை கொடுக்கப்பட்டன
New Delhi:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சென்ற ஆண்டு அக்டோபர் உச்ச நீதிமன்றம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பிணை கொடுத்து தீர்ப்பளித்தது. அப்படி கொடுக்கப்பட்ட பிணைக்கு எதிராக சிபிஐ தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது குறித்து நீதிமன்றம், “மேல் முறையீடு குறித்தான ஆவணங்கள் கவனமாக ஆராயப்பட்டது. முன்னர் கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக முடிவு செய்ய வேண்டிய எந்த முகாந்திரமும் இந்த மனுவில் இல்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிதம்பரம், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறி அவருக்குப் பிணை கொடுக்கக் கூடாது என்று வாதிட்டது சிபிஐ. ஆனால் அந்த வாதத்தை ஏற்காமல், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்து உத்தரவிட்டது. 

Advertisement

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத் துறையும், சிதம்பரத்தின் மீது தனியாக வழக்குத் தொடர்ந்திருந்தது. அது குறித்தும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். அந்த வழக்கிலும் கடந்த டிசம்பர் மாதம் சிதம்பரத்துக்குப் பிணை கொடுக்கப்பட்டது. 

பிணை கொடுத்தபோது நீதிமன்றம், “ப.சிதம்பரம் தொடர்ச்சியாக விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து ஊடகங்களிடம் பேசக் கூடாது. வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது. வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளோடு எந்த வித தொடர்பும் செய்யக் கூடாது,” என்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜாமீன் கொடுத்தது. 

Advertisement

ஐஎன்எக்ஸ் மீடியாவில் வெளிநாட்டு முதலீடுகள் வந்ததில் சிதம்பரம் உள்ளிட்ட சிலர் 10 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டியது சிபிஐ. 

கடந்த 2007 ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

Advertisement

உதவி செய்த கார்த்தி சிதம்பரத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் உள்ளது. அதை வைத்து சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளில் சொத்துகள் வாங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டுகிறது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தைக் கைது செய்தது சிபிஐ. 

Advertisement

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கத் துறையும் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சிதம்பரத்தைக் கைது செய்து விசாரணை நடத்தியது. 

கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் டெல்லியின் திகார் சிறையில் இருந்த சிதம்பரத்துக்கு கடந்த டிசம்பரில் பிணை கொடுக்கப்பட்டது. 

Advertisement