This Article is From Aug 08, 2018

நீதிமன்ற ஆணை மாநில அரசுக்கு பெரும் பின்னடைவு - காங்., செய்தித் தொடர்பாளர்

ராகுல் காந்தி இறுதி மரியாதை நிகழ்வில் பங்கெடுப்பார் என்று கூறப்படுகிறது

நீதிமன்ற ஆணை மாநில அரசுக்கு பெரும் பின்னடைவு - காங்., செய்தித் தொடர்பாளர்

கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கி அறிவித்த நீதிமன்ற ஆணை மாநில அரசுக்கு பெரும் பின்னடைவு என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சூரெஜ்வாலா கூறியுள்ளார்.

“டெல்லி தர்பாரின் குரலாக இருந்து கொண்டு, கருணாநிதிக்கு இடம் ஒதுக்க மறுத்து சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு இது ஒரு பெரும் பின்னடைவு. ராகுல்காந்தி கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் வேண்டும் என்று வலியுறுத்தினார். மத்திய மாநில அரசுகள் ஏன் அமைதியாக இருக்கின்றன? தி.மு.கவுக்கு நீதி கிடைத்தது. நீடுழி வாழ்க கலைஞர்!” என்று ட்விட்டரில் பதிவுட்டுள்ளார்.

சற்று முன் கிடைத்த தகவல் படி, ராகுல் காந்தி இறுதி மரியாதை நிகழ்வில் பங்கெடுப்பார் என்று கூறப்படுகிறது.

.