বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 10, 2020

உயிர்பிச்சை கேட்டு மன்றாடும் எருமை : மனதை உடைக்கும் வீடியோ

கசாப்புக் கடைக்காரர் அதை டிரக்கிலிருந்து இழுத்துச் செல்ல முயன்றபோது முன்னங்காலினால் முட்டி போட்டு அழுது கொண்டே இருந்தது

Advertisement
விசித்திரம் Edited by

இந்த வீடியோ 7மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

மனதை உடைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ சீனாவில் உள்ள இறைச்சிக் கூடத்தில் படமாக்கப்பட்டது. அங்கிருந்த எருமை மாடு முன்னங்காலை மடங்கி கண்ணீருடன் உயிர்பிச்சை கேட்கும் வீடியோ பார்ப்போரின் மனதை உருக்கிறது. 

டெய்லி மெயில்படி, குவாங்டாங் மாகாணத்தில் சாந்தோவில் ஞாயிற்றுக்கிழமை எருமை மாடு ஒன்று கசாப்புக் கடையி கொல்லப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாட்டின் உரிமையாளர் கசாப்பு கடைக்கு கொண்டு சென்றபோது  கண்களில் கண்ணீருடன் மாடு நடக்க மறுத்தது. 

உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மாடு கர்ப்பமாக இருந்திருக்கலாம் அதனால் அது வாழ வேண்டுமென வலுவாக விரும்பியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளன.

  .  


“இறைச்சிக் கூடத்திற்கு வந்த பின்னர் கசாப்புக் கடைக்காரர் அதை டிரக்கிலிருந்து இழுத்துச் செல்ல முயன்றபோது முன்னங்காலினால் முட்டி போட்டு அழுது கொண்டே இருந்தது.”என்று லின் வாங்க்போ சீன செய்தி நிறுவனமான தி பேப்பர் தெரிவித்தது. 

Advertisement

அங்கிருந்த தொழிலாளி படமாக்கிய இந்த காட்சிகள் சீன சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டன. அது ஆயிரக்கணக்காணோரை அதிர்ச்சிக்குள்ளாகியது.

 யுனிலாட் கருத்துப்படி, இந்த வீடியோ 7மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. விலங்கு பிரியர்கள் மாடு படுகொலை செய்யப்படுவதை தடுக்க ஒன்று கூடினர். 

Advertisement

நல்ல சமாரியர்களின் குழு ஒன்று மாட்டினை உயிருடன் வாங்க 24,950யுவான் (ரூ. 2.5லட்சம்)சேகரித்தது. பின்னர் அந்த மாடு அங்கிருந்த புத்த கோவிலில் விடப்பட்டது. கோவில் நிர்வாகமும் ஏற்றுக் கொண்டது. கோவில் மாட்டினை பராமரிக்க 4,000 யுவானையும் வழங்கினர்.

Advertisement