Read in English
This Article is From Jul 13, 2018

ஜம்மூ- காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: 2 பாதுகாப்புப் படையினர் பலி!

ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் அனாந்தாங் மாவட்டப் பகுதியில் சிஆர்பிஎஃப் படையினர் மீது இன்று தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்

Advertisement
இந்தியா
Srinagar:

ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் அனாந்தாங் மாவட்டப் பகுதியில் சிஆர்பிஎஃப் படையினர் மீது இன்று தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் சிஆர்பிஎஃப் படையின் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பொது மக்களைச் சேர்ந்த ஒருவரும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. 

‘அனாந்தாங் பகுதியில் உள்ள அச்சபால் சோக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் படையினர் மீது இன்று தீவிரவாதிகள் திடீரென்று தாக்குத் நடத்தினர். இதில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்’ என்று போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அனாந்தாங் பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement