அமெரிக்காவை சேர்ந்த உட்டாக் (Utah) நகரை சேர்ந்த 14 மற்றும் 15 வயதே ஆன இரண்டு சிறுவர்கள் விமானத்தை திருடியதற்காக கைது செய்யப்பட்டார்.
திருடிய விமானத்தை தரையில் இறக்கும்போது பிடிபட்ட அந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் வாழ்ந்து வந்த ஆசிரமத்தில் இருக்க பிடிக்கவில்லை என்றும் நண்பர்களுடன் வீட்டிற்க்கு செல்ல தான் விமானத்தை திருடினோம் என்று தெரிவித்தனர்.
சுமார் 8 மணி நேரம் வரை ஒற்றை இஞ்சின் விமானத்தை ஓட்டிச் சென்ற சிறுவர்களை விமானத்தை தரையிறக்கும் போது பிடித்தனர். பிடிபட்ட சிறுவர்களை போலீசார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுமதித்தனர்.
இந்த செய்தி முகநூலில் பதிவானது, அதை தொடர்ந்து பல லைக்குகளையும் பெற்று வருகிறது. அவர்களின் இந்த சாகசகத்தை கண்டு பலர் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.
Advertisement
COMMENTS
Advertisement