This Article is From Aug 29, 2019

அமலாக்கத் துறை (ED) வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமீன் என்னவாகும்..? - அடுத்த வாரம் முடிவு!

இந்த விவகாரத்தில் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றங்களையும் மறுத்துள்ள சிதம்பரம், தன்னை விடுவிக்கக் கோரியும் முறையிட்டுள்ளார்

அமலாக்கத் துறை (ED) வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமீன் என்னவாகும்..? - அடுத்த வாரம் முடிவு!

"என்னை கைது செய்வது என்பது அவமானப்படுத்துவதற்கு செய்யப்படும் வேலையாகும்”

New Delhi:

அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு குறித்தான முடிவு அடுத்த வாரம், செப்டம்பர் 5 ஆம் தேதி எடுக்கப்பட உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது சிபிஐ தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகியுள்ளார் சிதம்பரம். 

முன்னதாக சிபிஐ-யால் ரிமாண்டு செய்யப்பட்டுள்ளதற்கு எதிராகவும் ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சிதம்பரத்தை வரும் வெள்ளிக் கிழமை வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றங்களையும் மறுத்துள்ள சிதம்பரம், தன்னை விடுவிக்கக் கோரியும் முறையிட்டுள்ளார். “அரசு, இதுவரை என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டேன். அதனால் என்னை விடுதலை செய்ய வேண்டும். என்னை கைது செய்வது என்பது அவமானப்படுத்துவதற்கு செய்யப்படும் வேலையாகும்” என்று நீதிமன்றத்திலும் அவர் தெரிவித்துள்ளார். 

சிதம்பரத்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சிபிஐ, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவரை கைது செய்தோம் என்றுள்ளது. 

.