Read in English
This Article is From Jul 04, 2020

அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது கார் மோதி விபத்து!

விபத்து ஏற்பட காரணமான காரை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் துணை பேராசிரியர் சித்தார்த் பாகத் (41) என்பவர் ஓட்டி வந்துள்ளார். தொடர்ந்து, அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா

அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது கார் மோதி விபத்து!(Representational)

Highlights

  • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது கார் மோதி விபத்து!
  • வேகமாக வந்த கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழப்பு
  • உயிரிழந்த அந்த காவலர் லால் மான் சிங் சிசோடியா (51) என்று தெரியவந்துள்ளது
New Delhi:

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை காவல் ஆணையர் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த அந்த காவலர் லால் மான் சிங் சிசோடியா (51) என்று தெரியவந்துள்ளது. 

விபத்து ஏற்பட காரணமான காரை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் துணை பேராசிரியர் சித்தார்த் பாகத் (41) என்பவர் ஓட்டி வந்துள்ளார். தொடர்ந்து, அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக கூடுதல் துணை காவல் ஆணையர் தீபக் யாதவ் கூறும்போது, அமெரிக்க தூதரகத்தின் கேட் அருகே பணியில் இருந்த சிசோடியா விபத்தில் உயிரிழந்துள்ளார். 

Advertisement

தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்தியவர் மீது சாணக்யாபுரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய சித்தார்த் சம்பவத்தின் போது மது அருந்தியிருந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அவர் கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement