This Article is From Jun 22, 2019

மனைவி, 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த டியூஷன் ஆசிரியர்!!

கொலை செய்யப்பட்டவர்களில் 2 மாத குழந்தையும் உள்ளடங்கும். டெல்லியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இன்று நள்ளிரவு 2 மணிக்கு கொலை நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • Upendra Shukla killed his family around 2 am on Saturday
  • Wrote a note admitting the crime but didn't mention why he killed family
  • Told police that he was in depression for some time
New Delhi:

டெல்லியில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்து டியூஷன் ஆசிரியர்  ஒருவர் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராளி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலையை செய்த உபேந்திர சுக்லா என்பவர் டியூஷன் டீச்சரராக இருந்து வருகிறார். போலீஸ் அளித்த தகவலின்படி இன்று நள்ளிரவு 2 மணிக்கு கொலை நடந்துள்ளது. 

4 பேரை கொன்று விட்டு அவர்களை கொலை செய்து விட்டதாக உபேந்திர சுக்லா கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். கொலை செய்ததற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. 

உயிரிழந்த குழந்தைகளில் 7 வயது மகளும், 5 வயது மகனும், 2 மாத குழந்தையும் அடங்குவார்கள். உபேந்திர சுக்லா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மனைவியுடன் நடந்த சண்டையை தொடர்ந்து அவர் 4 பேரையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

.