This Article is From Nov 08, 2019

பணமதிப்பிழப்பு எனும் தீவிரவாத தாக்குதல்! - ராகுல் கடும் விமர்சனம்!!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எனும் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

பணமதிப்பிழப்பு எனும் தீவிரவாத தாக்குதல்! - ராகுல் கடும் விமர்சனம்!!

இந்த தாக்குதலுக்கு' காரணமாக இருப்பவர்கள் இன்னும் 'நீதிக்கு முன்னாள் தண்டிக்கப்படவில்லை' என்று ராகுல் காந்தி கடும் விமர்சனம்.

New Delhi:

நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகளை நள்ளிரவில் திடீரென தடை செய்த பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி. 

கடந்த 2016ம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் வழியே நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி எவ்வித முன்னறிவிப்பின்றி, திடீரென நாட்டில் புழக்கத்தில் இருந்த 90 சதவீத ரூபாய் நோட்டுகளான ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ரொக்கமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்துள்ளவர்கள் உடனே வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கணக்கில் வராமல் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் சிக்குவார்கள் என்றும் தெரிவித்தார். சில மாதங்கள் மக்கள் இந்த நடவடிக்கையை பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று அப்போது அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. குறிப்பாக, முன்பு இருந்ததைவிட பொருளாரம் மிகவும் மோசமான நிலைமையை அடைந்துள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டில் பல உயிர்களை பழியாக்கியுள்ளது. இந்த பொருளாதாரத்தை பேரழிவுக்கு உள்ளாக்கியது. 

இதனால், லட்சக்கணக்கான சிறு தொழில்கள் பெரிதும் பாதிப்படைந்தன. மேலும், கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எனும் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

எனினும், இந்த தாக்குதலுக்கு' காரணமாக இருப்பவர்கள் இன்னும் 'நீதிக்கு முன்னாள் தண்டிக்கப்படவில்லை' என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். 

மேலும், இந்த ட்வீட்டர் பதிவுடன் ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது தொடர்பான சில ஊடக அறிக்கைகளின் படங்களையும் உடன் வெளியிட்டிருந்தார்.  
 


முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்வீட்டர் பதிவில், பணமதிப்பிழப்பு எனும் பேரழிவு, இந்திய பொருளாதாரத்தை அழித்துவிட்டது என விமர்சித்தவர். #DeMonetisationDisaster என்ற ஹேஷ்டேக்குடன் பிரியங்கா அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

.