Read in English
This Article is From Jul 04, 2018

ஒன்றரை கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

மும்பையின் தானே பகுதியில் ரூ.1.68 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்

Advertisement
நகரங்கள்
Thane:

மும்பையின் தானே பகுதியில் ரூ.1.68 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழைய ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூன் 30ம் தேதி தானே மாவட்டத்தில் உள்ள கல்வா டவுனில் ரூ.1.68 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட முயன்ற மூன்று பேரை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்தனர். இதுகுறித்து இன்று தானே காவல்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில் `ரூ.1.68 கோடி மதிப்புள்ள 500, 1000 செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்தச் சம்பவத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பிருக்கிறதா என்னும் கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது.
 

Advertisement