This Article is From Nov 05, 2018

டெல்லியில் ஒரே வாரத்தில் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு

டெல்லியில் இதுவரைக்கும் 1,595 பேர் டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் ஒரே வாரத்தில் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு

2015-ல்தான் டெங்கு பாதிப்பு அதிகம் காணப்பட்டது. டெல்லியில் மட்டும் 60 பேர் உயிரிழந்திருந்தனர்.

New Delhi:

தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 285 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்தமாக கணக்கிடும்போது 1,595 பேர் டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு 3,829 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,114 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2015-ல் தான் டெல்லி டெங்குவினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த ஆண்டில் மட்டும் 11,800 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 60 பேர் உயிரிழந்தனர்.

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சில மருத்துவமனைகளில் சுற்றுலா பயணிகள் கூட டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

.