Read in English
This Article is From Aug 10, 2019

ஜாக்குவார் வாங்கி தராத தந்தை! கோபத்தில் பிஎம்டபிள்யூ காரை ஆற்றில் மூழ்கடித்த மகன்!

ஜாக்குவார் வாங்கி தராத ஆத்திரத்தில், தந்தை பரிசாக அளித்த புதிய பிம்டபிள்யூ சொகுசு காரை மகன் ஆற்றுக்குள் மூழ்கடித்து விட்டார். 

Advertisement
இந்தியா Edited by

மகனுக்கு விலை உயர்ந்த பிம்டபிள்யூ காரை பரிசாக அளித்துள்ளார்.

Chandigarh:

ஜாக்குவார் காருக்குப் பதிலாக பிஎம்டபிள்யூ காரை தந்தை பரிசாகக் கொடுத்ததால் கோபத்தில் மகன் காரை ஆற்றுக்குள் மூழ்கடித்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியானா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர், தனது மகனுக்கு விலை உயர்ந்த பிம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார். ஆனால், ஏற்கனவே தந்தையிடம் ஜாக்குவார் கார் வேண்டும் என்று மகன் கேட்டுள்ளார். 

இந்நிலையில், ஜாக்குவார் வாங்கி தராத ஆத்திரத்தில், தந்தை பரிசாக அளித்த புதிய பிம்டபிள்யூ சொகுசு காரை மகன் ஆற்றுக்குள் மூழ்கடித்து விட்டார். 

இதையடுத்து, கரைபுரண்டு ஓடும் ஆற்றுக்குள் மிதந்து சென்ற சொகுசு கார், இடையில் புற்கள் நிரம்பியிருந்த இடத்தில் சிக்கிக் கொண்டது.

இதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் அவர். பின்னர் உள்ளூரைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் உதவியுடன் அதை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

Advertisement

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement