This Article is From Apr 29, 2020

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் உச்சத்தைத் தொட்ட கொரோனா; விரிவான நிலவரம் (28.04.20)!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,138 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் உச்சத்தைத் தொட்ட கொரோனா; விரிவான நிலவரம் (28.04.20)!

தமிழகத்தில் தற்போது 902 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

ஹைலைட்ஸ்

  • நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது
  • அதிகபட்சமாக சென்னையில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • நேற்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 27 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 103 பேர் பாதிக்கப்பட்டனர். சென்னையைத் தவிர்த்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பேரும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. நேற்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுவரை தமிழகத்தில் 1,01,874 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 30 அரசு மருத்துவமனைகள் மற்றும் 11 தனியார் பரிசோதனைக் கூடங்களில் இந்த சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த சோதனைகளில் 2,058 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,138 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 902 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (28-04-2020):

அரியலூர் - 6

செங்கல்பட்டு - 70

சென்னை - 673

கோவை - 141

கடலூர் - 26

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 80

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 9

காஞ்சிபுரம் - 20

கன்னியாகுமரி - 16

கரூர் - 42

கிருஷ்ணகிரி - 0

மதுரை - 79

நாகை - 44

நாமக்கல் - 61

நீலகிரி - 9

பெரம்பலூர் - 7

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 15

ராணிப்பேட்டை - 39

சேலம் - 31

சிவகங்கை - 12

தென்காசி - 38

தஞ்சை - 55

தேனி - 43

நெல்லை - 63

திருப்பத்தூர் - 18

திருப்பூர் - 112

திருவள்ளூர் - 53

திருவண்ணாமலை - 15

திருவாரூர் - 29

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 48

விருதுநகர் - 32

மாவட்ட வாரியாக கொரோனா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (28-04-2020):

அரியலூர் - 2

செங்கல்பட்டு - 40

சென்னை - 195

கோவை - 120

கடலூர் - 18

தர்மபுரி - 0

திண்டுக்கல் - 62

ஈரோடு - 64

கள்ளக்குறிச்சி - 3

காஞ்சிபுரம் - 7

கன்னியாகுமரி - 6

கரூர் - 41

மதுரை - 36

நாகை - 28

நாமக்கல் - 45

நீலகிரி - 9

பெரம்பலூர் - 1

புதுக்கோட்டை - 0

ராமநாதபுரம் - 7

ராணிப்பேட்டை - 32

சேலம் - 16

சிவகங்கை - 10

தென்காசி - 2

தஞ்சை - 24

தேனி - 36

நெல்லை - 53

திருப்பத்தூர் - 17

திருப்பூர் - 83

திருவள்ளூர் - 29

திருவண்ணாமலை - 10

திருவாரூர் - 14

திருச்சி - 42

தூத்துக்குடி - 25

வேலூர் - 13

விழுப்புரம் - 22

விருதுநகர் - 16
 

.