This Article is From May 25, 2020

கொரோனா தொற்று எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்!

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16,277 பேரில் 8,324 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்!

Coronavirus in TN: தர்மபுரி, நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது
  • நேற்று மட்டும் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்

தமிழகத்தில் நேற்று 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 587 பேர். ஒட்டுமொத்த அளவில் 16,277 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 833 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 8,324 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,839 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 111 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (24-05-2020):

அரியலூர் - 356

செங்கல்பட்டு - 779

சென்னை - 10,576

கோவை - 146

கடலூர் - 427

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 133

ஈரோடு - 71

கள்ளக்குறிச்சி - 136

காஞ்சிபுரம் - 285

கன்னியாகுமரி - 51

கரூர் - 80

கிருஷ்ணகிரி - 22

மதுரை - 231

நாகை - 51

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 20

ராமநாதபுரம் - 58

ராணிப்பேட்டை - 92

சேலம் - 52

சிவகங்கை - 29

தென்காசி - 85

தஞ்சை - 83

தேனி - 106

நெல்லை - 282

திருப்பத்தூர் - 30

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 731

திருவண்ணாமலை - 188

திருவாரூர் - 37

திருச்சி - 75

தூத்துக்குடி - 160

வேலூர் - 37

விழுப்புரம் - 326

விருதுநகர் - 98

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 76

ரயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 19

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (24-05-2020):

அரியலூர் - 348

செங்கல்பட்டு - 23

சென்னை - 4,844

கோவை - 144

கடலூர் - 409

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 110

ஈரோடு - 69

கள்ளக்குறிச்சி - 61

காஞ்சிபுரம் - 152

கன்னியாகுமரி - 27

கரூர் - 55

கிருஷ்ணகிரி - 19

மதுரை - 115

நாகை - 48

நாமக்கல் - 77

நீலகிரி - 13

பெரம்பலூர் - 135

புதுக்கோட்டை - 7

ராமநாதபுரம் - 29

ராணிப்பேட்டை - 67

சேலம் - 35

சிவகங்கை - 25

தென்காசி - 52

தஞ்சை - 67

தேனி - 54

நெல்லை - 99

திருப்பத்தூர் - 26

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 270

திருவண்ணாமலை - 81

திருவாரூர் - 32

திருச்சி - 66

தூத்துக்குடி - 39

வேலூர் - 31

விழுப்புரம் - 300

விருதுநகர் - 44

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16,277 பேரில் 8,324 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி, நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 
 

.