This Article is From Aug 21, 2018

ஓணத்துக்கு சபரிமலை வர வேண்டாம்: பக்தர்களுக்கு தேவசம் போர்டு வேண்டுகோள்

ஓணம் சிறப்புப் பூஜைகளுக்காக சபரிமலை கோயில் ஆகஸ்ட் 23 திறக்கப்பட்டு ஆகஸ்ட் 28 அன்று மூடப்படும்

Advertisement
இந்தியா Posted by

பம்பை நதியில் வெள்ளம் இன்னும் வடியாததால், ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் “பம்பை நதிக்கு அருகிலுள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. கோயிலுக்குச் செல்லும் வழியில் பல மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. வழி நெடுக சேறாக இருப்பதால் இந்நிலையில் பக்தர்கள் கோயிலுக்கு வருவது மிகவும் ஆபத்தானது” என்று சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

எனினும் ஓணம் சிறப்புப் பூஜைகளுக்காக சபரிமலை கோயில் ஆகஸ்ட் 23 திறக்கப்பட்டு ஆகஸ்ட் 28 அன்று மூடப்படும்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement