This Article is From Jan 21, 2019

யாகம் நடந்ததா, இல்லையா..?- ஓபிஎஸ் மழுப்பல் பதில்

நேற்று அதிகாலை 3 மணி முதல் 8:30 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய யாகம் வளர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

யாகம் நடந்ததா, இல்லையா..?- ஓபிஎஸ் மழுப்பல் பதில்

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில், நேற்று அதிகாலை 3 மணி முதல் 8:30 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய யாகம் வளர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை அதிமுக தரப்பு மறுத்திருந்தது. இந்நிலையில் பன்னீர்செல்வமே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், “முதலமைச்சராக ஆவதற்கு யாகம் நடத்தினால் போதும் என்கிற நியதி இருந்தால், அதனால் முதலமைச்சராக முடியும் என்ற சக்தியிருந்தால், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அப்படிப்பட்ட யாகத்தை நடத்துவார்கள். ஆகவே, ஸ்டாலினுக்கு இந்த மூட நம்பிக்கையில் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன்.

யாகம் நடத்தினால் எண்ணம் ஈடேறும் என்றால், பிரதமராக வருவதற்குக் கூட யாகம் நடத்தப்படும். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளில் புது அர்த்தம் கர்பிப்பதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றவர் தொடர்ந்து,

“கோட்டையில் எப்போது நான் எனது அறைக்குச் சென்றாலும், சாமி கும்பிட்டு விட்டுத்தான் எனது பணியை மேற்கொள்வேன். அப்படி நான் செய்ததைத் தான், ‘முதலமைச்சரை மாற்ற, முதல்வராக உருவெடுத்திட பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளார்' என்ற பொய்யான பித்தலாட்டத்தை ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்” என்று கடுகடுத்தார்.

 

மேலும் படிக்க : “மக்களிடம் விளக்குங்க..!”- ‘யாக' விவகாரத்தில் திருமா சீற்றம்
 

.