This Article is From Apr 22, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம் - ஏப்ரல் 21 வரையான நிலவரம்!

கொரோனாவால் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் மொத்த உயிரிழப்பு 18 ஆக அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம் - ஏப்ரல் 21 வரையான நிலவரம்!

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இதுவரை 1,596 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • நேற்று அதிகபட்சமாக சென்னையில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று தமிழகளவில், 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனை மூலம் கண்டறியப்பட்டது. இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,596 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

நேற்று மட்டும், மாநில அளவில் 178 பேர், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் கொரோனாவால் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் மொத்த உயிரிழப்பு 18 ஆக அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் கீழ் வருமாறு: 

சென்னை - 358

கோவை - 134

திருப்பூர் - 109

திண்டுக்கல் - 76

ஈரோடு - 70

திருநெல்வேலி - 62

செங்கல்பட்டு - 56

நாமக்கல் - 51

திருச்சி - 50

தஞ்சை - 49

திருவள்ளூர் - 48

மதுரை - 46

நாகை - 44

தேனி - 43

கரூர் - 42

விழுப்புரம் - 40

ராணிப்பேட்டை - 39

தென்காசி - 31

திருவாரூர் - 28

தூத்துக்குடி - 27

கடலூர் - 26

சேலம் - 24

வேலூர் - 22

விருதுநகர் - 19

திருப்பத்தூர் - 17

கன்னியாகுமரி - 16

சிவகங்கை - 12

திருவண்ணாமலை - 12

ராமநாதபுரம் - 11

காஞ்சிபுரம் - 11

நீலகிரி - 9

கள்ளக்குறிச்சி - 9

பெரம்பலூர் - 5

அரியலூர் - 4

புதுக்கோட்டை - 1

முழுமையான சோதனைகளுக்குப் பிறகு எண்ணிக்கை விவரங்களில் சில மாறுதல்கள் செய்யப்படலாம்.


 

.