This Article is From May 19, 2020

அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை… குறையும் ஆக்டிவ் கேஸ்… தமிழகத்தில் கொரோனா நிலவரம் என்ன?

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11,760 பேரில் 4,406 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை… குறையும் ஆக்டிவ் கேஸ்… தமிழகத்தில் கொரோனா நிலவரம் என்ன?

ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை.

ஹைலைட்ஸ்

  • கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் அதிகரிப்பு
  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது
  • சென்னையில் இதுவரை 7,117 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 364 பேர். ஒட்டுமொத்த அளவில் 11,760 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 234 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 4,406 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,270 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 81 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (18-05-2020):

அரியலூர் - 355

செங்கல்பட்டு - 537

சென்னை - 7,117

கோவை - 146

கடலூர் - 418

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 123

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 100

காஞ்சிபுரம் - 203

கன்னியாகுமரி - 44

கரூர் - 73

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 163

நாகை - 50

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 7

ராமநாதபுரம் - 37

ராணிப்பேட்டை - 83

சேலம் - 49

சிவகங்கை - 26

தென்காசி - 70

தஞ்சை - 72

தேனி - 88

நெல்லை - 206

திருப்பத்தூர் - 29

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 566

திருவண்ணாமலை - 155

திருவாரூர் - 32

திருச்சி - 67

தூத்துக்குடி - 85

வேலூர் - 34

விழுப்புரம் - 312

விருதுநகர் - 54

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 18

ரயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 2

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (17-05-2020):

அரியலூர் - 328

செங்கல்பட்டு - 188

சென்னை - 1,600

கோவை - 144

கடலூர் - 362

தர்மபுரி - 4

திண்டுக்கல் - 97

ஈரோடு - 69

கள்ளக்குறிச்சி - 39

காஞ்சிபுரம் - 107

கன்னியாகுமரி - 16

கரூர் - 45

கிருஷ்ணகிரி - 0

மதுரை - 108

நாகை - 45

நாமக்கல் - 77

நீலகிரி - 11

பெரம்பலூர் - 33

புதுக்கோட்டை - 2

ராமநாதபுரம் - 21

ராணிப்பேட்டை - 46

சேலம் - 35

சிவகங்கை - 12

தென்காசி - 40

தஞ்சை - 62

தேனி - 43

நெல்லை - 64

திருப்பத்தூர் - 20

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 179

திருவண்ணாமலை - 41

திருவாரூர் - 29

திருச்சி - 62

தூத்துக்குடி - 28

வேலூர் - 22

விழுப்புரம் - 276

விருதுநகர் - 37

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11,760 பேரில் 4,406 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 

.