ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை.
ஹைலைட்ஸ்
- கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் அதிகரிப்பு
- தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது
- சென்னையில் இதுவரை 7,117 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் நேற்று 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 364 பேர். ஒட்டுமொத்த அளவில் 11,760 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 234 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 4,406 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,270 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 81 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (18-05-2020):
அரியலூர் - 355
செங்கல்பட்டு - 537
சென்னை - 7,117
கோவை - 146
கடலூர் - 418
தர்மபுரி - 5
திண்டுக்கல் - 123
ஈரோடு - 70
கள்ளக்குறிச்சி - 100
காஞ்சிபுரம் - 203
கன்னியாகுமரி - 44
கரூர் - 73
கிருஷ்ணகிரி - 20
மதுரை - 163
நாகை - 50
நாமக்கல் - 77
நீலகிரி - 14
பெரம்பலூர் - 139
புதுக்கோட்டை - 7
ராமநாதபுரம் - 37
ராணிப்பேட்டை - 83
சேலம் - 49
சிவகங்கை - 26
தென்காசி - 70
தஞ்சை - 72
தேனி - 88
நெல்லை - 206
திருப்பத்தூர் - 29
திருப்பூர் - 114
திருவள்ளூர் - 566
திருவண்ணாமலை - 155
திருவாரூர் - 32
திருச்சி - 67
தூத்துக்குடி - 85
வேலூர் - 34
விழுப்புரம் - 312
விருதுநகர் - 54
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 18
ரயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 2
மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (17-05-2020):
அரியலூர் - 328
செங்கல்பட்டு - 188
சென்னை - 1,600
கோவை - 144
கடலூர் - 362
தர்மபுரி - 4
திண்டுக்கல் - 97
ஈரோடு - 69
கள்ளக்குறிச்சி - 39
காஞ்சிபுரம் - 107
கன்னியாகுமரி - 16
கரூர் - 45
கிருஷ்ணகிரி - 0
மதுரை - 108
நாகை - 45
நாமக்கல் - 77
நீலகிரி - 11
பெரம்பலூர் - 33
புதுக்கோட்டை - 2
ராமநாதபுரம் - 21
ராணிப்பேட்டை - 46
சேலம் - 35
சிவகங்கை - 12
தென்காசி - 40
தஞ்சை - 62
தேனி - 43
நெல்லை - 64
திருப்பத்தூர் - 20
திருப்பூர் - 114
திருவள்ளூர் - 179
திருவண்ணாமலை - 41
திருவாரூர் - 29
திருச்சி - 62
தூத்துக்குடி - 28
வேலூர் - 22
விழுப்புரம் - 276
விருதுநகர் - 37
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11,760 பேரில் 4,406 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை.