Coronavirus in TN: தமிழகத்தில் நேற்று மட்டும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை 71 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
- நேற்று மட்டும் சென்னையில் 309 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது
- தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் நேற்று 434 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 309 பேர். ஒட்டுமொத்த அளவில் 10,108 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 359 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,599 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,435 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 71 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (15-05-2020):
அரியலூர் - 348
செங்கல்பட்டு - 450
சென்னை - 5,946
கோவை - 146
கடலூர் - 416
தர்மபுரி - 5
திண்டுக்கல் - 114
ஈரோடு - 70
கள்ளக்குறிச்சி - 61
காஞ்சிபுரம் - 176
கன்னியாகுமரி - 35
கரூர் - 56
கிருஷ்ணகிரி - 20
மதுரை - 143
நாகை - 47
நாமக்கல் - 77
நீலகிரி - 14
பெரம்பலூர் - 139
புதுக்கோட்டை - 7
ராமநாதபுரம் - 31
ராணிப்பேட்டை - 78
சேலம் - 35
சிவகங்கை - 13
தென்காசி - 56
தஞ்சை - 71
தேனி - 78
நெல்லை - 136
திருப்பத்தூர் - 28
திருப்பூர் - 114
திருவள்ளூர் - 516
திருவண்ணாமலை - 140
திருவாரூர் - 32
திருச்சி - 67
தூத்துக்குடி - 48
வேலூர் - 34
விழுப்புரம் - 306
விருதுநகர் - 46
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 9
மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (15-05-2020):
அரியலூர் - 195
செங்கல்பட்டு - 68
சென்னை - 783
கோவை - 144
கடலூர் - 37
தர்மபுரி - 1
திண்டுக்கல் - 83
ஈரோடு - 69
கள்ளக்குறிச்சி - 14
காஞ்சிபுரம் - 71
கன்னியாகுமரி - 16
கரூர் - 44
கிருஷ்ணகிரி - 0
மதுரை - 87
நாகை - 44
நாமக்கல் - 77
நீலகிரி - 11
பெரம்பலூர் - 30
புதுக்கோட்டை - 2
ராமநாதபுரம் - 21
ராணிப்பேட்டை - 42
சேலம் - 35
சிவகங்கை - 12
தென்காசி - 34
தஞ்சை - 53
தேனி - 42
நெல்லை - 63
திருப்பத்தூர் - 18
திருப்பூர் - 114
திருவள்ளூர் - 84
திருவண்ணாமலை - 14
திருவாரூர் - 29
திருச்சி - 56
தூத்துக்குடி - 26
வேலூர் - 20
விழுப்புரம் - 128
விருதுநகர் - 32
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10,108 பேரில் 2,599 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை.