This Article is From Feb 16, 2019

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்! - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னை திரும்பினார். அவருக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்! - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

தேமுதிக கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றார். இந்நிலையில் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து இன்று அதிகாலை 3 அளவில் சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

அதிகாலை சென்னை திரும்பினாலும், 10 மணி நேரத்திற்கு பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு மேல் விமான நிலையத்தை விட்டு விஜயகாந்த் வெளியே வந்தார். பேட்டரி காரில் வந்த விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

விஜயகாந்தை வரவேற்பதற்கு விமான நிலையத்தில் குவிந்து இருந்த தேமுதிக தொண்டர்களும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, அதிகாலை 3 மணிக்கு வந்தோம். பயண களைப்பால் சிறிது நேரம் விஜயகாந்த் ஓய்வு எடுத்தார். விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

.