This Article is From May 22, 2020

திமுகவில் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்ட வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்!

துரைசாமி, தன்னிடம் ஏதும் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிராக கட்சியில் சதி நடப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

திமுகவில் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்ட வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்!

திமுகவில் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்ட வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்!

திமுகவில் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்ட வி.பி.துரைசாமி இன்று பாஜகவில் இணைந்தார். 

முன்னதாக, தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்ததாக, திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி.துரை சாமியை நீக்கி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருந்தார். 

துரை சாமிக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 
திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரை சாமி சில தினங்களுக்கு முன்பாக பாஜகவின் தமிழக தலைவர் எல்.முருகனை சந்தித்துப் பேசினார். இந்த சம்பவம் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வி.பி.துரைசாமி அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக, திமுக துணைப் பொதுச் செயலாளராக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அடிப்படை உறுப்பினர் பதவி ஏதும் நீக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, பொறுப்பு நீக்கப்பட்டுள்ள துரைசாமி, தன்னிடம் ஏதும் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிராக கட்சியில் சதி நடப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னணியில் வி.பி.துரைசாமி இன்று காலை பாஜகவில் இணைந்தார். 

.