This Article is From Aug 09, 2018

கருணாநிதி அடக்கம் செய்த இடத்திற்கு சென்ற ஸ்டாலின்… மலர்தூவி அஞ்சலி!

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி, செவ்வாய் கிழமை மாலை 6:10 மணிக்கு காலமானார்

கருணாநிதி அடக்கம் செய்த இடத்திற்கு சென்ற ஸ்டாலின்… மலர்தூவி அஞ்சலி!

மெரினா கடற்கரையில் கருணாநிதி அடக்கம் செய்திருக்கும் இடத்திற்கு இன்று அவரின் மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி, செவ்வாய் கிழமை மாலை 6:10 மணிக்கு காலமானார். இதையடுத்து, அவரை சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு இன்று சென்ற ஸ்டாலின், மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஆ.ராசா, தங்கம் தென்னரசு உள்ளிட்ட கட்சியினரும் இருந்தனர்.

கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு பெரும் திரளான மக்கள் இன்று வந்து அஞ்சலி  செலுத்தினர். அதேபோல அவரது கோபாலபுர இல்லமும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஆனால், திமுக-வின் தலைமையகமான  ‘அண்ணா அறிவாலயத்தில்’ ஜன நடமாட்டமே இல்லாமல் இருந்தது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.