This Article is From Mar 30, 2019

சேடிஸ்ட் சேட்டையை பார்த்து திமுக ஒருக்காலும் ஓய்ந்துவிடாது! - மு.க.ஸ்டாலின்

பாசிஸ்ட் பாய்ச்சல், சேடிஸ்ட் சேட்டையை பார்த்து திமுக ஒருக்காலும் ஓய்ந்துவிடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேடிஸ்ட் சேட்டையை பார்த்து திமுக ஒருக்காலும் ஓய்ந்துவிடாது! - மு.க.ஸ்டாலின்

காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும்

படையினரும் இன்று அதிகாலையில் சோதனை நடத்தினர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில்

துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் உள்ளிட்ட பரிசுபொருட்கள் துரைமுருகன் வீட்டில்

வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், வருமான

வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்த எந்த ஒரு ஆவணங்களோ, பணமோ எதுவும் கைப்பற்றபடவில்லை என கூறப்படுகிறது.

இந்த சோதனை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறும்போது, மத்திய அரசு காலில் விழுந்து வருமான வரித்துறையை வைத்து மிரட்டி பார்க்கின்றனர். மிரட்டுவதன் மூலம் எங்களை பணியவைக்க முடியாது. நாங்கள் மிசாவை பார்த்தவர்கள், அடக்குமுறையை பார்த்தவர்கள். பொய் வழக்கு போடுவது, பூச்சாண்டி காட்டுவது இதற்கெல்லாம் பயந்தவன் திமுகவின் கடமட்டத்தில் கூட கிடையாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், திமுகவினர் வீட்டில் நடந்த ரெய்டு விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, ரெய்டு பயமுறுத்தலுக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என கடும் கண்டனம் தெரிவித்தார்.

பாசிஸ்ட் பாய்ச்சல், சேடிஸ்ட் சேட்டையை பார்த்து திமுக ஒருக்காலும் ஓய்ந்துவிடாது. அதிமுக கூட்டணி படுதோல்வியடையும் என்ற சர்வே முடிவுகளால் பிரதமர் மோடி எரிச்சல், ஏமாற்றம் அடைந்துள்ளார். அதனால் தான் பிரதமர் மோடியே வருமானவரித்துறை ரெய்டுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

.