This Article is From Apr 13, 2019

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திமுக! செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு!!

இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய 22 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திமுக! செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு!!

மே 19-ம்தேதியன்று 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

சூலூர்,  அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் 22 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் 18 தொகுதிகளுக்கு ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 18-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதன்பின்னர் திடீர் திருப்பமாக மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மே 19-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

இந்த நிலையில் சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. இதன்படி சூலூரில் பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் பி. சரவணன், ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில் எம்.சி. சண்முகையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இந்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

.