This Article is From Feb 19, 2020

வண்ணாரப்பேட்டை போலீஸ் தடியடி: ட்விட்டரில் திமுக - ரஜினி ரசிகர்கள் மோதல்! #ViralVideos

DMK vs Rajini Fans - சில நாட்களுக்கு முன்னர் தனது போயஸ் தோட்டம் இல்லத்துக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி

வண்ணாரப்பேட்டை போலீஸ் தடியடி: ட்விட்டரில் திமுக - ரஜினி ரசிகர்கள் மோதல்! #ViralVideos

DMK vs Rajini Fans - “இந்த மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்னை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்,”

DMK vs Rajini Fans - சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது.

அதனை அடுத்து பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதோடு கண்மூடித்தனமான தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இந்த தாக்குதலில் ஒரு சிலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. இது தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்தான விவாதங்கள் சமூக வலைதளங்களில் வீரியமாக நடந்து வருகின்றன. 

குறிப்பாக திமுக ஆதரவாளர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையில் கடும் வாதப் போர் நடந்து வருகிறது. ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள், #கலவரம்தூண்டும்திமுக ஹேஷ்-டேக் மூலம் திமுகவை கடுமையாக சாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் திமுக எம்பிக்கள் உட்பட பலரும், #வீதிக்குவாங்க_ரஜினி என்கிற ஹேஷ்-டேக் கொண்டு, நடிகர் ரஜினிகாந்தை, இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்குமாறு அழைத்து வருகின்றனர்.

இதற்கு காரணம், சில நாட்களுக்கு முன்னர் தனது போயஸ் தோட்டம் இல்லத்துக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவைகள் குறித்து கருத்து சொன்னார். அவர் சிஏஏவுக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் பேசிய பின்னர், “இந்த மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்னை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்,” என்று அதிரடியாக கூறினார். 

இதை சுட்டிக்காட்டித்தான் திமுக தொண்டர்கள், ரஜினியை சீண்டி வருகின்றனர். அதே நேரத்தில் திமுகவுக்கு எதிரான காணொளிகள் மற்றும் கருத்துகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். அதில் சில வைரல் ட்வீட்கள் இதோ:


 

.