This Article is From Jun 22, 2019

காங்கிரசுக்கு எத்தனை காலம் தான் திமுக பல்லக்கு தூக்குவது? கே.என்.நேரு பரபரப்பு பேச்சு

காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம் தான் திமுக பல்லக்கு தூக்குவது? என திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு சர்ச்சைகுரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Written by

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பிரச்னையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வருகிறது. அந்தவகையில், திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார்.

எத்தனை நாள் தான் காங்கிரஸூக்கு பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் இது குறித்து கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவேன் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்படும் என்று முன்பே தெரிந்திருந்தும் குடிநீர் பிரச்சனைக்கு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத அதிமுக அரசை கண்டித்து பேசினார்.

Advertisement

அப்போது மக்களவை தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளதை குறிப்பிட்டுப் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை கூட்டணி சேர்க்காமல் திமுக தனித்துப்போட்டியிட வேண்டும் என்றார்.

கே.என்.நேருவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, உட்கட்சி விவகாரங்கள், மன வருத்தங்கள் பலருக்கும் இருக்கலாம், அதனை பொது வெளியில், ஒரு பொதுக்கூட்டத்தில் வெளிப்படுதியிருக்க தேவையில்லை என்று கூறுகின்றனர்.

Advertisement
Advertisement