This Article is From May 09, 2020

தமிழகத்தில் 2 நாட்களில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா? டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

2வது நாளாக நேற்று,  ஒரே நாளில் ரூ.122 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா? டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தில் 2 நாட்களில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா? டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் 2 நாட்களில் டாஸ்மாக் வசூல் எவ்வளவு தெரியுமா?
  • முதல் நாளில் ரூ.172.59 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
  • டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தது உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் 2 நாட்களில் மட்டும் மதுபானம் விற்பனை எவ்வளவு என்பதை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து அமலில் உள்ளது. இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு மே.7ம் தேதி முதல் மீண்டும் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர். 

மக்களின் அத்தியாவசிய தேவைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அத்தனையையும் தகர்த்து ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம்தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.

ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் ஆன்லைன் விற்பனை எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் படி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்றும் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்ட முதல் நாளில் (மே.7ல்) நேற்று முன்தினம் மட்டும் ரூ.172.59 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் 6.75 கோடி, திருவள்ளூர் 3.31 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.45.67 கோடி, மதுரையில் ரூ.46.78 கோடி, சேலத்தில் ரூ.41.56 கோடி, கோவையில் ரூ.28.42 கோடி மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. 

2வது நாளாக நேற்று,  ஒரே நாளில் ரூ.122 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.294 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.32.45 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.31.17 கோடிக்கும், சேலம் மண்டலத்தில்  ரூ.29.09 கோடிக்கு, கோவை மண்டலத்தில் 20.01  கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.9.28 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

.