Read in English
This Article is From Jul 04, 2018

முதலாளியைக் காப்பாற்ற சென்ற நாய், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கியதால் விவசாயி மொக்குசு, அவரது மாடு, நாய் என சம்பவ இடத்திலேயே மூன்று உயிர்களும் பிரிந்தன

Advertisement
Tamil Nadu
Madurai, Tamil Nadu:

மதுரை: உசிலம்பட்டியில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விவசாயியை காப்பாற்ற சென்ற நாயும் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தது.

மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பெய்த கனமழையில், மின்சாரக் கம்பிகள் ஆங்காங்கே வயல் வெளியில் அறுந்து கிடந்தன. வயலில் புல் மேய்ந்துக் கொண்டிருந்த மாடு மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கியது. தனது மாட்டை காப்பாற்ற சென்ற, கல்கொண்டாலப்பட்டியை சேர்ந்த 65 வயது விவசாயி மொக்குசுவையும் மின்சாரம் தாக்கியது. இதனால் உயிருக்கு போராடிக் கொன்டிருந்தார் மொக்குசு. அப்போது அவரைக் காப்பாற்ற வயல் வெளியில் இருந்த அவரது நாய் ஓடியது. பரிதாபமாக, நாயையும் மின்சாரம் விட்டு வைக்கவில்லை.

மின்சாரம் தாக்கியதால் விவசாயி மொக்குசு, அவரது மாடு, நாய் என சம்பவ இடத்திலேயே மூன்று உயிர்களும் பிரிந்தன. இந்த துயரமான செய்தியை அறிந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தற்கு விரைந்தனர்.

Advertisement