हिंदी में पढ़ें Read in English বাংলায় পড়ুন
This Article is From Feb 28, 2019

‘இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் நற்செய்தி..!’- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Reuters)

செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப்பிடம், இந்திய- பாகிஸ்தான் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பிடமிருந்து எனக்கு சொல்லிக் கொள்ளும்படியான நற்செய்தி வந்துள்ளது' என்றுள்ளார். 

வட கொரியா, அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையில் இன்று வியட்நாமில் நடைபெற்றது. அப்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப்பிடம், இந்திய- பாகிஸ்தான் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குத்தான் ட்ரம்ப், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பிடமிருந்து எனக்கு சொல்லிக் கொள்ளும்படியான நற்செய்தி வந்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான பதற்ற சூழல் சீக்கிரமே முடிவுக்கு வரும் என நம்புகிறேன்' என்று பதில் கூறியுள்ளார். 

Advertisement

(ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்களுடன் எழுதப்பட்டது)

 

Advertisement

மேலும் படிக்க - ‘மேலும் ராணுவ நடவடிக்கை பிரச்னையை பெரிதாக்கும்!'- அமெரிக்கா கருத்து

Advertisement