Read in English
This Article is From Jul 16, 2018

வரதட்சணை கொடுமையால் டெல்லி பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

டெல்லியில் கணவர் வீட்டாரின் வரதட்சணை கொடுமை தாங்காமல், விமானப் பணிப்பெண் ஒருவர் தற்கொலை

Advertisement
நகரங்கள்
New Delhi:

டெல்லியில் கணவர் வீட்டாரின் வரதட்சணை கொடுமை தாங்காமல், விமானப் பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரி்ந்து வந்தவர் அனிசியா பத்ரா. இவரது கணவர் மயங்க் சிங்கி. இவர்கள் இருவரும் கடந்த இரந்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

குடிபோதைக்கு அடிமையான மயங்க் சிங்வி, தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி துன்புறுத்திவந்ததாகத் தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  மனமுடைந்த அவர் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று தனது செல்போனில் இருந்து கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பின், கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக சம்பவ இடத்தில் இருந்து அனிசியாவின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், அனிசியாவின் குடும்பத்தாரிடம் இருந்து பெற்ற புகாரின் அடிப்படையில், அவரது கணவர் மயங்க் சிங்வியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதுதொடர்பாக அனிசியாவின் சகோதரர் கூறுகையில், தற்கொலை செய்துகொள்ளும் முன் எங்களுக்கு அனிசியா அனுப்பிய குறுஞ்செய்தியில், தனது கணவர் மிகவும் துன்புறுத்துவதாகவும், தனது மரணத்திற்கு காரணமான அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
Advertisement